புதன், 24 ஜூன், 2015

வாசிப்பை நேசி!



கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை, நூலகம் மற்றும் கோவை விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘வாசிப்புத் திருநாள்’ நிகழ்வு கல்லூரி நூலகத்தில் 23.06.2015 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
            இந்நிகழ்வினை மொழித்துறைத் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்கள் வாசித்தலே நம்மின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்; உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என நூல் பற்றிய புரிதலை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில்; சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறவாதீர்! என நூல்வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களின் மனதில் ஆழப் பதித்து, இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்றார்.

திங்கள், 22 ஜூன், 2015

வாசிப்புத் திருநாள்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாணவா்களை நூல் வாசிக்க வைக்க வேண்டும் எனும் நோக்கில் 23.06.2015 அன்று கல்லூரி நூலகத்தில் வாசிப்புத் திருநாள் நிகழவிருக்கின்றது.
இதுபோன்ற நிகழ்வுகளை அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனெனின் மாணவர்கள் வாசிப்பு என்பது பற்றிய அறிவு இன்றியே கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். இதனுள் சிறுமாற்றம் நிகழ்ந்தால் அது இந்நிகழ்வின் வாகையாகும். அதனையே எதிர் நோக்குகின்றது இந்நிகழ்வு.

சனி, 16 மே, 2015

இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

இனம் பற்றி,

   
இந்தியாவில் இருந்து இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும்.
     அருமைத் தமிழ்ச் சொந்தங்களே! ஆய்வு நண்பர்களே! இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் www.inamtamil.com தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு தமிழியல், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், இலக்கியம், இலக்கணம், கலை, கணினி தொடர்பான தொழில் நுட்பம் போன்ற துறைசார் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும். இவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம்.

வியாழன், 7 மே, 2015

பொறுத்திரு! வாழ்வு கனிந்திடும்!

இயந்திர வரவிற்கு முன்பு மனிதன் மனிதனாய் இருந்தான். இன்று இயந்திரம் போன்று தம்மின் வாழ்க்கையையும் மனிதன் அமைத்துக் கொண்டு விட்டான். அது, இன்ப வாழ்வை இடியாய்த் தகர்த்தது தகர்த்துக் கொண்டும் வருகின்றது. எங்கும் வேகம். எதிலும் வேகம். வேகத்தின் ஊடே மனிதனின் மனமும் மயிலிறகாய் உதிர்ந்துவிட்டது. தத்தம் குழந்தைகளின் சேட்டையைக் கூட பொறுத்துக் கொள்ள மனித மனம் இடங்கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு மனிதனின் மனம் தூசாய் மன்றிவிட்டது. ஆயின், குழந்தை மனமும் நஞ்சாய் மாறிக் கொண்டிருக்கிறது. இது அழிவை நோக்கிய ஒரு பயணமே. அது எப்படி? ஒரு நல்ல நீர்க்குடத்தில் ஒரு துளி நஞ்சு கலந்துவிட்டால், அந்நீர் முழுவதும் நஞ்சாய் மாறுவது போல்வதே.

புதன், 1 ஏப்ரல், 2015

தமிழ்க்கதிர் முப்பதில் பன்முகத் தன்மை

வெண்பா என்றால் நம்மின் நினைவில் நிற்பது சங்கப் பாடல்களும் ஔவையார் பாடல்களும் காளமேகப் புலவர் பாடல்களுமே. இக்காலத்தில் புதுக்கவிதை, ஐக்கூ, ஒருவரி போல்வன கவிதைகளுக்கே சிறப்பிடம் உண்டு, பழங்கதை வடிவமான வெண்பாவில் எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. அத்தகையோரில் ஒருவரே தகடூர்த் தமிழ்க்கதிர். அவர் எழுதியிருக்கும் வெண்பாக்கள் நிறைய உள. அவற்றுள் தமிழ்க் கதிர் முப்பது எனும் தொகுப்பின் சிந்தனைகளுள் பன்முகத் தன்மைகளைச் சுட்டிக்காட்டகின்றது இக்கட்டுரை.
இவரின் இத்தொகுப்பில் முப்பது வெண்பாக்கள் உள. இத்தொகுப்பு, தமிழ்வழிக் கல்வி வெண்பா விளக்கு எனும் இதழில் வெளிவந்துள்ளது. இவ்விதழின் நோக்கங்கள்: 1.தமிழ்வழிக் கல்வி வெண்பாவைத் தொடர்ந்து வெளியிடுவது, 2.வெண்பா தமிழரங்கம் எனத் தமிழ் மொழியில் பல்துறையைப் பாடுவது, 3.தமிழறிவால் உலகின் (நமது உலகம் பகுதி) மேன்மையைக் காப்பது எனும் முக்கொள்கையை உடையதாக விளங்குகின்றது (2015:2). இச்சிறப்புமிகு இதழில் வெளிவந்த தொகுப்பே தமிழ்க்கதிர் முப்பது. இத்தொகுப்பால் இடம்பெற்ற முப்பது வெண்பாக்கள் கல்விழி நூலாசிரியன் சிறப்பு, நூலின் சிறப்பு, மனிதன் வாழ வேண்டிய வழிமுறை, இயற்க்கையின் சிறப்பு, உலகப் பொதுமையை ஏற்கும் தன்மை, சங்கப்பாடல்களின் சிறப்பு, வாழ்க்கை, படைப்பாற்றல், பொதுநலம் போல்வன கருத்துக்களை மையமிட்டனவாக அமைந்துள்ளன. அவை குறித்து சிறிது விளக்குதும்.

சனி, 31 ஜனவரி, 2015

செம்மொழிக் கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் தேசியக் கருத்தரங்கங்களைப் பல்வேறு நிறுவனங்களின் வழி நடத்தி வருகின்றது. அக்கருத்தரங்களில் ஆய்வுக்கே முதன்மைத் தரப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழைப் பகுதிப் பாடமாகப் பாயிலும் இளங்கலை ஆங்கிலம், தொழில் நுட்பவியல், நுண்ணியல், வணிகவியல் போல்வன துறை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்குச் சங்க இலக்கியங்களை  அறிமுகப்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளது. இதனைப் பெற்று வெற்றி வாகை சூடிய நாயகர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்களேயாம். அதன் இறுதி நிகழ்வு முறைமைகள் வருமாறு:
கோவை - ஜனவரி - 31. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தரங்கம் 29.01.2015, 30.01.2015, 31.01.2015 ஆகிய மூன்று நாட்கள் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கோவை, ஓம் சக்தி மாத இதழ் ஆசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்கள் தலைமையேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் முதல்வர்  முனைவர் மு.இளமுருகன் அவர்கள் கருத்தரங்கம் குறித்த தனது கருத்துரையை வழங்கினார்.

வியாழன், 29 ஜனவரி, 2015

செம்மொழித் தேசியக் கருத்தரங்கம் - சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்


இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோவை - 641 028

     சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தினை 29.01.2015 இன்று தொடங்கியது. மேலும் இக்கருத்தரங்கம் 30.01.2015, 31.01.2015 ஆகிய இரண்டு நாட்களுக்கு  நடைபெறும்.

          இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார்.

          தொடர்ந்து கோவை, பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் தவத்திரு. மருதாசல அழகளார் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில் ஒவ்வொரு இடங்களில் நடைபெறும் கருத்தரங்கங்கள் இலக்கியங்களில் ஆழமாகச் செல்லும். இப்படி இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதுபோல் அமைந்தால் தான் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். அந்த வகையில்  சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்ற இக்கருத்தரங்கத்தின் தலைப்பை இன்றைய மாணவர்களுக்குப் பொருத்தமானதாக அமைவதோடு மற்ற கல்லூரிகளுக்கும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. மேலும் சங்க இலக்கியங்கள் எவை எவை என்பது பற்றி எடுத்துரைத்து அவை மக்களின் வாழ்வியல் அங்கமாக விளங்கிவருவதையும் எடுத்துரைத்தார்.

புதன், 14 ஜனவரி, 2015

நூல் வெளியீடு

வணக்கம் நண்பர்களே/ கவிஞர்களே
கவிஞர் செ. பா. சிவராசன் - ஆறாம் படைப்பான " ஒருத்தி ஒருவனுக்கு " என்னும் நாவல் மற்றும்  முனைவர் சத்தியராஜ் அவர்களின் "பீச்சி " , கவிஞர் முனியசாமியின் "இலக்கணம் அறியா கவிதை " ஆகிய கீதம் பதிப்பகத்தின்  நூல்கள் 38 வது சென்னைப் புத்தககக் கண்காட்சியில் 20 -01-02015 மதியம் 1.30 மணிக்கு வெளியிட உள்ளோம் . தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் எழில் இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இவ் விழாவில் தாங்கள் நண்பர்களோடும் , குடும்பத்தோடும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம் . நன்றி
கவியன்புடன் அழைக்கும் ,
 செ.பா. சிவராசன்
 முனைவர் சத்தியராஜ்
 கவிஞர் முனியசாமி  

வெள்ளி, 9 ஜனவரி, 2015

அகராதி – வரலாறும் மொழியியலும்


வ. நதியா
முனைவர் பட்ட ஆய்வாளர்
அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர் - 10



முன்னுரை
மனித சமுதாயத்தின் வாழ்க்கைமுறை, செயல்பாடு, பண்பாடு போன்றவற்றைப் பதிவுசெய்யும் கருவியாக விளங்குவது இலக்கியமாகும். இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பல்என்னும் பாடல் வரி இலக்கியத்திலிருந்து இலக்கணம் முகிழ்த்தது என்பதை உணர்த்துகின்றது. இலக்கியம் அகராதித் தொகுப்பிற்குரியச் சொற்களை வழங்கும் கருவூலமாகத் திகழ்கின்றது. அகராதிகள் இலக்கணத்தின் பின்னிணைப்பாக கருதப்பெறுகின்றன.
மொழி அமைப்பைக் கற்றல் என்ற நிலையில் கூடுதலாகச் சொற்பொருளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மரபு இலக்கணங்களிடையே நிலவி வந்துள்ளது. மொழியைக் கற்பதிலும், கற்பித்தலிலும் இலக்கணம், இலக்கியம், அகராதி என்பன கருவி நூல்களாக விளங்குகின்றன.
இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் கற்றல் மற்றும் கற்பித்தலின் கூறுகள் ஒழுங்குபடுத்தபட்டவையாக அமையவில்லை. அவற்றை எளிமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பெற்றவை அகராதிகளாகும். அகராதிகள் மொழியில் பயன்படுத்தப்பெறும் சொற்களைப் பாதுகாத்து வைப்பதில் காப்பகமாகவும், மொழியைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் ஐயங்களை நீக்குவதில் தீh;ப்பகமாகவும் இலக்கணம், பொருள் மற்றும் பயன்பாடு தொடர;பான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றன.

சனி, 3 ஜனவரி, 2015

எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

                                                                                                                                    முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
                                                                                                                                                   தமிழ் – உதவிப் பேராசிரியர்
                                                                                                                                     இந்துசுதான் கலை & அறிவியல் கல்லூரி
                                                                                                                                            கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.

கடன் இருவகைத்து. ஒன்று: சொற்கடன். இது திருப்பித்தரும் இயல்பினல்லது. மற்றொன்று: பொருட்கடன். இது ஒரு சாரருக்கு நன்மையும், ஒரு சாரருக்குத் தீமையும் விளைவிக்கும் (ஞா.தேவநேயப்பாவாணர், 2009:91). இதனுடன் எழுத்துக் கடனையும் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு மொழியை முழுமையாக கொடைமொழி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிமுறையேயாம். இந்த எழுத்துக்கடன் ஒரு மொழி தழைத்து வளர அடிகோலுமா? அல்லது அடிச்சுவடே இல்லாது வீழ வழிவகுக்குமா? என்பது ஆராயற்பாலது. ஏனெனின் கொடை மொழிக்குரிய எழுத்துகளைக் கொள்மொழி ஏற்கும்போது, எழுத்துக்கள் மட்டும் அம்மொழியில் சென்று சேர்வது இல்லை. மாறாகச் சொற்களும் பொருட்களும் சென்று சேருகின்றன. இவ்வாறு செல்லும்போது அம்மொழிக்குரிய நிலைப்பாடு என்னவாக இருக்கும். அங்கு ஒரு நிலைப்பாடும் இராது என்பதே வெளிப்படை. அதனை இலக்கணக் கலைஞர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவ்விலக்கணக் கலைஞர்கள் விதி வகுத்திடவும் தவறவில்லை.
 தொல்பழங்காலத்தில் இந்தியாவின் பெருநிலை மொழிகளாகத் தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் சமசுகிருதம் அனைத்து மொழிகளிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தியும் வருகின்றது. இத்தாக்குறவிற்குத் தமிழ் தவிர பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன தொடக்கத்திலேயே இடம் தந்தன. ஆனால் தமிழ்மொழி மட்டும் இடம் தரவில்லை. இதனை,
 வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே – தொல்.சொல்.397
எனும் விதி துலக்கும். இவ்விதி பேச்சு வடிவத்தை ஏற்கலாம் என்பதையும், எழுத்து வடிவத்தை ஏற்கலாகாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. ஆக, தொல்பழங்காலத்தில் இருந்த இந்நிலைப்பாடு பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்பும் மாறின. சமசுகிருதத்தின் ஆதிக்கம் தமிழ்மொழியின்பால் காலூன்றியது எனலாம் (க.ப.அறவாணன், 2006:121 – 126). ஆகவே, தமிழ்மொழிக்குரிய முதன்மை எழுத்துக்கள் முப்பது என்றமை, இன்று ஆய்தத்துடன் சேர்த்து முப்பத்தேழு (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ) எனக் கூறுமாறும் ஆகிவிட்டது. குறிப்பாக இன்று மழலையரின் தமிழ் அரிச்சுவடியிலும் இடம்பெற்றுவிட்டமை நோக்கற்பாலது. இவ்வாறு உட்புகுந்த சமசுகிருத மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல விரிந்து நின்றது. ஆகவே இன்று மாந்தர் பெயர்கள் அனைத்தும் சமசுகிருதமாகவே அமையக் காணலாம்.

வியாழன், 25 டிசம்பர், 2014

தமிழும் அதன் இலக்கண நூல்களும்


முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
9600370671

தமிழ் தமிழர்களினது தாய்மொழியாம். இது திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது. ம்மொழி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, ரீயூனியன், திரினிடாட்டு போன்ற நாடுகளில் குறைவாகவும் பேசப்படுகிறது.
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் ஏறத்தாழ ஓரிலக்கக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தொல்லெழுத்துப் பதிவுகளில் அறுபதினாயிரத்திற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ தொன்னூற்றைந்து விழுக்காடு தமிழில் உள்ளன. பிற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் [பிரதி பண்ணுவது] மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 500ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. இச்சிறப்புமிகு மொழியில் உள்ள இலக்கணங்களைப் பட்டியலாகத் தொகுத்துத் தருகின்றது இக்கட்டுரை.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

தொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு


                                                                                         - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
ட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.
பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு.  ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.

வியாழன், 13 நவம்பர், 2014

Gnana Sambandha Upaathiyaayar (20th Cent.)


Birth Place  : SuLipuram in ILa Naadu; was lived in Thirunelveli.

Father   :   Selvanaayaka Chettiyaar; Saivar

      He was a scholar of Arumuganaavalar; good at learning the works of Kanthapuranam; Periyapuranam and instructed it to others. Moreover, he was a great orator and poet.

Works  : Maa Nikka piLLaiyaar Thiruvarutpaa, Kathirkaamavelar Thiruvarutpaa, Unique songs (Thanip paadal).

Translated by :    R. Nithya Sathiyaraj
                
Source: Biographical Dictionary of Tamil Men of  Letters (Tamil)

சனி, 8 நவம்பர், 2014

ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை

                                                - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)

அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.

புதன், 29 அக்டோபர், 2014

Gnana kuuthar (16th C)


Place: Viirasaivar; VeNpaakam in Thondi Naadu..

           He is one of the scholar of  Nirambavalakiyar Desikar.

Works: ThiruvaiyaaRu puraaNam; Sepaesar puraaNam.

 ThiruvaiyaaRu puraanam: This is otherwise called as panjaNathipuraaNam. But, it seems to be different from aiyaaRRu puraaNam. It consists of 12 viruthaas apart frame foreword (Paayiram). Moreover, comprised of 437 Thiruviruthaas including foreword..

 Translated by :    R. Nithya Sathiyaraj
                
Source: Biographical Dictionary of Tamil Men of  Letters (Tamil)

வியாழன், 23 அக்டோபர், 2014

Gnanakootha Sivaprakasha Desikar (17th C)

Lived: Sivan paakkam.

           He was a saiva ascetic; got a second award in Thuraiyur Sivaprakasha Desikar monastery; specialized in Grammar and Literature.

Works: Virudhachala puraanam; Thiruvidaimaruthura puraanam

 Virudhachala puraanam: It comprised of 435 prose piece enunciated the greatness of multi - mountains of Virudhachalam.

 Translated by :    R. Nithya Sathiyaraj
                
Source: Biographical Dictionary of Tamil Men of  Letters (Tamil)

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வெள்ளி, 17 அக்டோபர், 2014

திருவாவடுதுறைஆதினமடம் X தருமபுரஆதினமடம் = இலக்கியக்கொடை


முனைவர் மு.முனீஸ் மூர்த்தி
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சிராப்பள்ளி.



சைவத்திருமடங்கள் 14. சமயப் பரப்புகையை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட இம்மடங்கள் சமயத்தோடு தமிழை வளர்க்கவும் தலைப்பட்டன. இம்மடங்களைச் சேர்ந்தோர் வளர்த்த தமிழ் சைவத்தமிழானது. தத்தம் சமயக் கடவுளை முன்னிறுத்திப் பல புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்துச் சைவத் தமிழ்த்தொண்டாற்றினர். திருமடங்களைச் சார்ந்தோரின் சைவத்தமிழ்ப்பணி ஒருபுறம் இவ்வாறிருக்க மறுபுறம் புறச்சமயக் காழ்ப்புணர்வு மனநிலையும் அரங்கேறியது. சைவர்கள் சைவ இலக்கியங்களைத் தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற இலக்கியங்களைப் படிக்கவே கூடாது என்றுவெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துதங்கள் மனநிலையை வெளிப்படுத்தினர் மடங்களைச் சார்ந்தோர். இந்நிலைப்பாடுகி.பி.18ஆம் நூற்றாண்டுவரை நிலவியது கவனத்திற்குரியது. இக்காலகட்டத்தில் திருமடங்களுக்கிடையே நிலவிய உயர்வு தாழ்வுப் போராட்டத்தின் விளைவாக ஒரேசமயத்தைச் சேர்ந்த இருவேறுமடங்களைச் சேர்ந்தோரின் புலமை வெளிப்பாட்டை இருபிரிவினரும் எதிரெதிர் திசை நின்று விமர்சிக்கும் செயல்பாடு உச்சம் பெற்றது.

புதன், 17 செப்டம்பர், 2014

செவ்வாய், 2 செப்டம்பர், 2014