வெள்ளி, 29 நவம்பர், 2013

திருவள்ளுவரும் கிரேக்க அறிஞர்களும் [சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ]

முன்னுரை
உலகில் உணர்வு ஒன்றுபடும் நிலையில் ஒத்த கருத்துக்கள் ஒருங்கே மலர்ந்து எங்கும் மணம் பரப்புதல் இயல்பாதல் உண்டு. மொழி வேற்றுமையும்  திசை வேற்றுமையும் பாராது மக்கள் கலந்து பழகிய பாங்கினாலும், படித்த மேதைகளுக்கிடையே நிகழ்ந்த அறிவுப் பரிமாற்றத்தாலும், அரசியல் வாணிபத் தொடர்புகளாலும், சமயச் சார்பாலும் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை காணும் உணர்வு இவ்வுலகில் வளர்ந்து வருவதைக் காணலாம். மனிதகுல வாழ்க்கைக்குத் தேவையான நல்வழி கருத்தியல்களைக் குறித்து சமய தத்துவ ஞானிகள் ஒருபுறமும், இலக்கண இலக்கிய மேதைகள் மறுபுறமும் விளக்கமாகவும், குறிப்பாகவும் கூறிச் சென்றுள்ளனர். இங்குத் திருவள்ளுவரின் பொதுநலச் சிந்தனைகளோடு, கிரேக்க அறிஞர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர்களின் பொது நலச் சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புதன், 20 நவம்பர், 2013

எதற்கு?

                                                                                                                                  - த. சத்தியராஜ்
கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் புரட்சி மிகுந்த சிந்தனைகளைத் தெலுங்கு மக்களிடையே பரப்பி வந்தார் வேமனா. இவரின் சிந்தனைகளை அறியாத தெலுங்கரே இல்லை எனலாம் என்பர். அந்த அளவிற்கு அவருடைய கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. அவர் சிறந்த ஞானியாகவும் திகழ்ந்துள்ளார்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கேடு


முகப்பு
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

அம்மும்மூர்த்திகளுள் கேடுகள் தரக்கூடிய செயல்பாடுகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறும் போக்கு திருவள்ளுவரிடமும் வேமனவிடமும் காணப்படுகின்றது. ஆனால், அக்கேடுகள் எவை என நீண்டதொரு பட்டியலைத் தருவதில் சர்வக்ஞர் திகழ்கிறார். அவ்வாறு திகழ்வதற்கும் ஒரு காரணம் உண்டு. கேடுகளாக அறியக்கூடியவற்றை அனைத்தையும் உவமைப்படுத்திக் கூறினால் அது விரியும். ஆகையால் அவர் சுருக்கித் தொகுத்து விளக்கியுள்ளார். இத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சனி, 9 நவம்பர், 2013

தாயின் கண்ணீரும் குமுறலும்


பாலூட்டி சோறூட்டி 
தாலாட்டி சீராட்டி 
என் செல்லத்தை வளர்த்தேனடா 
இழவுக்குப் போய் திரும்ப 
இழவடா எம் இல்லத்து 
மானத்தைப் பறித்த கயவனே 
உயிரையும் அல்லவா பறித்திட்டாயடா 

சனி, 2 நவம்பர், 2013

விழாவா? உடல் நலமா?

சுவாசத்துக்குக் கேடு
செவிக்குக் கேடு
திடமனத்திற்குக் கேடு
காற்றுக்குக் கேடு
பட்டாசெனும் வெடியாம்! - அதை

சில்லரை மனிதனடா

எனக்குத் தீபஒளி
ஈழத்தில் வசிக்கும் எம் சொந்தத்திற்கோ
தீராவலி
நான்வேறு அவன்வேறு பிரிக்கவில்லை
மனித உயிர்களை மதிக்கத் தெரியாத பாவிகளே
தமிழனின் ராட்சத உயிர்களை

அவனின் உருவாக்கம்

அவனின் எல்லையிலாக் காதல்
அவனை உருவாக்கியது
குற்றமுள்ள மனிதர்களால் கிளித்தெரியப்படவில்லை
பாலைவனத்தில் வீசும் காற்றினால் சுத்தம் செய்யப்படவில்லை

சனி, 26 அக்டோபர், 2013

கடிகாரம்


மூலம்: கன்னடம் (தினகர தேசாயி)
தமிழில்: சே. முனியசாமி
                
நேரத்துக்குச் சொந்தமே கடிகாராம்
வெள்ளியின் நிறத்து வட்ட உருவமே
நேரத்தை அறிவதற்கு நீ ஆதாரம்
டிக் டிக் நண்பனே டிக் டிக் டிக்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஆதிகவி பம்பா

மூலம்: கன்னடம்
தமிழில்: சே. முனியசாமி
இந்தியாவில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. பல மொழிகள் காணப்படினும் அதில் சிறப்பு வாய்ந்தவை சிலவே. ஏனெனில் பல மொழிகள் பேச்சுமொழிகளாக  காணலாகின்றன. இத்தகைய மொழிகளுக்கு   எழுத்து வடிவம் இல்லை. திராவிட மொழிகளுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனிச்சிறப்பு உண்டு.  இம்மொழி  கர்நாடக மாநிலத்தில் பேசப்படுகிறது. இக்கன்னட மொழியில் பழமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்கள் மிகுந்து காணலாகின்றன. இருப்பின் அம்மொழியின் முதல் கவியாக திகழ்பவர் பம்பா.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஒன்பான் துளைகள்

நம் உடலில் ஒன்பது வகைத் துளைகள் உள்ளன. அவை:

  1. கண் - 2
  2. காது - 2
  3. மூக்கு
  4. வாய்
  5. குதம்
  6. குய்யம்
  7. கொப்பூழ்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டம் - புலவர் செ.இராசுவின் வரலாற்றுப் பார்வை

   வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள் வரலாற்றில் போதுமான அளவு இடம்பெறவில்லை. அக்குறையை நீக்கித் தமிழ் வளர்ச்சியில்  ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றி புலவர் இராசு அவர்கள் ஈரோடு மாவட்ட வரலாறு என்ற சிறப்பு மிக்க படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்நூல் தமிழக வரலாற்றில் தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு என்ன? என்பதையும், அக்காலத்தில் தமிழ்ச்சூழல், தமிழின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைத் தெளிவாகவும், விரிவாகவும் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வியாழன், 17 அக்டோபர், 2013

மனநோய்

                                                                                                  - த. சத்தியராஜ்
    இவ்வுலகில் வாழும் மனிதர் அனைவரும் மனநோய் உடையவர்களே. அந்நோயின் வெளிப்பாடு அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும். அவ்விருப்பம் மட்டுமே மனநோயாகாது. தற்சிந்தனையின்மையும் அதன்பாற்படும் என்பது தெலுங்குக் கவிஞர் வேமனாவின் எண்ணம். அவர்,

வெள்ளி, 11 அக்டோபர், 2013

திருக்குறளின் பழைய உரையர் பதின்மர்


  1. தருமர்
  2. மணக்குடவர்
  3. தாமத்தர்
  4. நச்சர்
  5. பரிதி

உருவம்

மனித உருவிற்கு
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
                                                 - இரா. நித்யா சத்தியராஜ்

வியாழன், 10 அக்டோபர், 2013

தாய்மை

தாயின்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
                                                   - இரா. நித்யா சத்தியராஜ்

தந்தைமொழி

குழந்தையாக இருந்தபோது
தந்தைமொழி கசந்தது
தந்தை என்னருகில் இல்லை
அவரது மொழி என்னருகில்
ஒலிக்கிறது இனிமையாக
நான் தாயான போது
                                         - இரா. நித்யா சத்தியராஜ்

சுவாமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீடு



-       . சத்தியராஜ்

கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) எழுதப்பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும் விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம். பெரும்பான்மையான  இடங்களில், தெலுங்கு சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள்

பரத்தை எனும் சொல்லும், காமக்கிழத்தி எனும் சொல்லும் தொல் வழக்கில் இருந்துள்ளதென்பது தொல்காப்பியம் காட்டும் உண்மை. இச்சொற்கள் தற்பொழுது மருவி விலைமகளிர் , விபச்சாரி (Prostitute) என வழங்கப்படுகின்றன. இம்மகளிர்களின் வாழ்க்கைநெறி காம நுகர்ச்சியினால் தம்மை நாடி வருவோருக்கு, அத்தாகத்தைத் தீர்த்து மகிழ்ச்சி அளிப்பதேயாம் என்பது உலகளாவிய பொதுச்சிந்தனை. இதனை ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன; பதிவு செய்தும் வருகின்றன. அச்சிந்தனையைத் தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும்  பதிவு செய்துள்ளன. அதனை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மேலும் வாசிக்க: http://www.muthukamalam.com/essay/literature/p60.html