சே.முனியசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சே.முனியசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜூன், 2017

அம்பேத்கர்


பாரத நடுவில் பிறந்த
     சாதி வலியின் பேரிடியே
ஆகாய அகல அளவாய்
     விரிந்துநின்ற ஆல விருச்சமே
கோடி கோடி கருப்பர்களின்
     முதன் முதல் தாயே
கடல்வழியினும் உலக வழியினும்
     வழிந்து முழங்கிய கோசமே
குழந்தையில் யான் கண்ட
     போராட்டத்தின் வழியினை
அழைத்து அழைத்துக் காட்டுகிறேன்

ஸ்ரீபுரந்தரதாசர்

மூலம் - கன்னடம்
தமிழில் - சே.முனியசாமி

      புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
      ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.