ஒப்பிலக்கியம்


     முன்னுரை
உலகில் உணர்வு ஒன்றுபடும் நிலையில் ஒத்த கருத்துக்கள் ஒருங்கே மலர்ந்து எங்கும் மணம் பரப்புதல் இயல்பாதல் உண்டுமொழி வேற்றுமையும்  திசை வேற்றுமையும் பாராது மக்கள் கலந்து பழகிய பாங்கினாலும்படித்த மேதைகளுக்கிடையே நிகழ்ந்த அறிவுப் பரிமாற்றத்தாலும்அரசியல் வாணிபத் தொடர்புகளாலும், சமயச் சார்பாலும் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை காணும் உணர்வு இவ்வுலகில் வளர்ந்து வருவதைக் காணலாம்மனிதகுல வாழ்க்கைக்குத் தேவையான நல்வழி கருத்தியல்களைக் குறித்து சமய தத்துவ ஞானிகள் ஒருபுறமும்இலக்கண இலக்கிய மேதைகள் மறுபுறமும் விளக்கமாகவும்குறிப்பாகவும் கூறிச் சென்றுள்ளனர்இங்குத் திருவள்ளுவரின் பொதுநலச் சிந்தனைகளோடுகிரேக்க அறிஞர்களான சாக்ரடீஸ்பிளேட்டோஅரிஸ்டாட்டில் ஆகியோர்களின் பொது நலச் சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சாக்ரடீஸும் வள்ளுவரும்
     தருக்க முறையிலும் அறிவியல் பூர்வமாகவும் எப்பொருளையும் உற்று நோக்கும் ஆராய்ச்சி உணர்வினை சாக்ரடீஸ் வளர்த்தார்உண்மையான அறிவுதான் மனிதனை விடுவிக்கும் என்றும்நன்முறையில் வாழ்க்கை நடத்துதல் என்பது அறிவினால் மட்டுமே முடியும் என்றும் நல்லனவற்றை தெரிதல்தான் அறிவின் வேலை என்றும் இவர் கருதினார்அரசியலில் பங்கு கொள்ளும் யாவருக்கும் அறிவுத்தெளிவு இருக்க வேண்டும்  என்றும் கருதினார்உண்மையான தளபதி என்பவன் அரசியற்கலையில் அறிவு பெற்றவன் என்றும்மனித இனத்தின் வாக்குகள் எல்லாம் பெற்றாலும் கூட ஒரு பேதை தளபதி பதவிக்கு அறுகதை அற்றவன் என்றும் அவர் கூறினார்திருக்குறளில் இறைமாட்சிஅமைச்சுபடைமாட்சி முதலிய அதிகாரங்களில் ஒரு நாட்டுத்தலைமையில் பணிபுரிவோன் அரசனாகஅமைச்சனாகபடைத்தலைவனாக பல நிலைகளில் பங்கு பெறினும் இவர் அனைவர்க்கும் விரிந்த கல்வியும்நுண்ணிய மதியும் தேவை என்பதை வள்ளுவரும் வற்புறுத்தியுள்ளார்மக்களின் நலனுக்காக ஆள்பவனே அரசன் என்பது சாக்ரடீஸ் கருத்துதிருக்குறளிலும் இக்கருத்துண்டுநண்பன் ஒருவன் இன்னொரு நண்பனின் அற முன்னேற்றத்திற்குரிய வகையில் நடக்க வேண்டும் என்பது சாக்ரடீசின் கருத்தாகும்மன உறுதியினையும்தளரா ஊக்கத்தினையும் இவர் வலியுறுத்தினார்.
அறிவுடைமைதான் எல்லாம் உடைமையாகும்,      அறிவாவது நல்லன அறிதல் என்பார் சாக்ரடீஸ்திருக்குறளிலும் அறிவுடைமை என்னும் தனியதிகாரம் அமைந்துள்ளமை கவனிக்கற்பாலது. சாக்ரடீஸ் மாந்தரின் எளிய ஆசைகளும்இலட்சியங்களும் பயனற்றவை என்றும், உணர்வினால் இன்பத்தை புறக்கணிக்கத் தூண்டுவது அறிவாற்றலே என்றும் விளக்கம் தந்தார்இன்பம் முற்றிலும் தீயதுஇன்பத்திற்கு அடிமையாவதை விட பைத்தியமாகத் திரிவது மேல் என்று முழங்கினார்வறுமைவருத்தந்தரும் கடுமையான உழைப்புஅவமதிப்பு என்பன யாவும் ஆன்மீக விடுதலைக்கும் அறத்திற்கும் முன்னேற்றக் கருவிகளாப் பயன்படுவன என்றும் இவர் பேசினார்வேரூன்றிவிட்ட பழக்கங்களையும்சட்டங்களையும் கொண்டு வாழ்க்கையினை ஒழுங்குபடுத்த முடியாது என்றும்அறிவு ஆணையிடும் சட்டங்களே தம்மைக் கட்டுப்படுத்தும் என்றும் இவர் கருதினார்.
ஆதலின் எல்லோரும் அறிவு வாய்ந்தவராக விளங்கினால் பல்வேறு பிரிவுடைய நாடுகள்சட்ட பேதங்கள் தாமே மறைந்து போகும்ஆதலின்அடிமை முதல் ஆண்டாள் வரை யாவரும் ஒரு நாட்டினராகவும்ஒரே சட்டத்தினால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவும் இருப்பர் என்றார்ஆனால் வள்ளுவர் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதால் வேரூன்றிய வழக்கங்களில் தக்கனவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று கருதினார்எனினும் உலகம் தழீஇயது ஒட்பம் என்று கூறுதலின் ஒன்றிய அறிவினால் ஒரே உலகம் காணலாம் என்னும் கருத்தும் அவர்க்கு உண்டு என்பதை மறுத்தற்கில்லைஇவர் இளநெஞ்சங்களை பகுத்தறிவினால் கிளர்ந்தெழச் செய்தார் என்றும், நம்பிக்கைகளை தம் சிந்தனைக் கத்தியால் வெட்டி வீழ்த்தினார் என்றும்கிரேக்க அரசினரால் நஞ்சு கொடுத்து சாக்ரடீஸ் கொல்லப்பட்டார் என்றும் கூறுவர்திருக்குறளில் இடம்பெறும் பெயர்கண்டு நஞ்சுண்டமையவர் நலத்தக்க நாகரீகம் வேண்டுபவர் என்னும் குறள் இவரை நினைத்து எழுந்திருக்கலாம்.
பிளேட்டோவும் வள்ளுவரும்
            தன் ஆசான் உள்ளுரைகளுக்கெல்லாம் எழுத்துரு தந்த மேதை பிளேட்டோ ஆவார்பிறர் எனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவனோஅதை நான் பிறர்க்குச் செய்ய வேண்டும் என்பது இவர்தம் பொன்மொழி ஆகும்நல்லன யாவை என்பது குறித்து சாக்ரடீஸ் கருதிய சிந்தனைக்கு விளக்கம் கண்டார் பிளேட்டோகவினும் இன்பமும் பயனும் மிக்கவைதாம் நல்லன என்பது இவர் விளக்கம் ஆகும்பகுத்தறிவின் ஆட்சியின் கீழ் நன்னிலையில் உள்ள மனிதனின் ஆன்மா ஆணையிடப்பெற்று ஒத்திசைக்க வேண்டும்என்பது பிளேட்டோவின் கருத்து. 1. அறிவுடைமை 2. துணிவுடைமை 3. மிதத்தன்மை அல்லது அளவு 4. நீதி அல்லது நடுவுநிலைமை என்னும் நான்குமே விழுமிய பொருட்கள் என்றும்,  இந்நான்கிலும் தத்துவ ஞானத்தை முழுமையாப் பெறுவதலாகிய அறிவுடைமையும் சமூகத் தொடர்புகளில் நடுவு நிலைமைக்கு வேராக விளங்கும் ஒழுங்கு பெற்ற ஆன்ம உறுப்புக்களின் செப்பமும் மிகவும் முக்கியமானவை என்றும் பிளேட்டோ கூறினார்.
            குடியரசு என்னும் தன் இலட்சிய நாட்டில் நன்றாக வளர்க்கப்பெற்ற இருபாலினமும் தகுதிக்கு ஏற்பத் தொழில்களைப் பங்கிட்டுக் கொள்ளுதல்அரச ஆணைக்குக் கீழ்படிதல் என்பன சாமானியரின் தருமமாகும்அரசினை இயக்குதலும் கல்வியைக் கவனித்தலும் ஆழ்ந்த தியானம் புரிதலும் தத்துவ மேதைகளின் செயலாகும்பிளேட்டோவின் குடிமக்கள் கைத்தொழில் புரிதல்சில்லரை வணிகம் புரிதல்அரசியல் தோரணையில் பணம் ஈட்டல் முதலியன கூடாதுமூன்று ஆண்டுகளுக்கு இசைகலையைப் பயில வேண்டும்கணாதத்தில் தேர்ச்சி பெற வேண்டும். பதினெட்டு வயது வரை மது அருந்தக்கூடாதுமுப்பத்தைந்து வயதுக்குமேல் பிரம்மச்சாரியாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும்மக்கள் பாடும் பாடல்களும் இசைகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்அறிவு ஆனந்தம்செல்வம்புகழ் என்பன எய்தற்குரிய விரும்பத்தக்க நற்பொருள்கள் ஆகும்பிளேட்டோ சிந்தனைகளின் ஒரு பகுதிதான் திருக்குறள் கருத்துக்களுடன் ஒப்பிடத் தக்கவைதத்துவ மேதைகள் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பார் பிளேட்டோகல்வியறிவு சான்றவர்களை வள்ளுவர் நாட்டுத் தலைவராகக் கருதினார்ஐம்பொறிகளாகிய குதிரைகளைப் பகுத்தறிவு என்னும் சாரதி இயக்கினான் என்றும்நன்மையில் ஆன்மா அமரத்துவத்தைக் காண்கிறது என்றும்எங்கும் மானமே அனைத்து அழகிற்கும் நன்மைகளின் உத்வேகத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்றும் பிளேட்டோ எண்ணினார்.
அரிஸ்டாட்டிலும் வள்ளுவரும்
            பிளேட்டோவின் மாணவராகிய அரிஸ்டாட்டில் எழுதாத துறைகளே இல்லைஇவர் எழுதிய அக நூல்களில் 'நிகமேக்சியன் எதிக்சு' என்பது குறிப்பிடத்தக்கதாகும்வாழ்க்கையில் இன்பத்தில் அழுந்தி விடாமலும் துன்பத்தில் மூழ்கிவிடாமலும், இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் நிற்றலும்தற்பெருமை தற்சிறுமைகட்கிடையில் உள்ள வாய்மையும்சினம் கோழைத் தனத்திற்குமிடையேயுள்ள வீரமுமாகிய நடுப்பாதையில் மிதத்தன்மையில் நல்வாழ்வு புரிவதையே இவர் வற்புறுத்தினார்புத்தர்பிரான் போதித்த மாத்திமிகு நெறியின் மறுமதிப்பாக இது தோன்றுகிறதுஇருவரின் கோட்பாடும் 'மகினும் குறையினும் நோய் செய்யும்என்னும் திருக்குறளில் ஒலிக்கக் கேட்கிறோம்.

புகழுக்காக இறப்பினை அஞ்சாது எதிரேற்றால்தான் துணிவு என்றால் கடற்புயலில் சிக்கியவன் அஞ்சாதவாயின் அது துணிவெனப்படாதுபோரில் இறத்தல் முதலியன புகழ் தருதலின் துணிவாகும் என்றார்ஊதாரித்தனமாக இல்லாமல் உபயோகிக்கப்படும் வகையில் செய்யப்பெறும் உதவிகளையே ஈகை என்றும்இதற்குப் பயன்படுவதே பொருள் என்றும் கூறினார்அறக்கழிவாக பொருள் ஈட்டுதலில் அரிஸ்டாட்டில் உடன்படவில்லைஉயர்ந்த உள்ளம் கொண்டவரே பெருமை படைத்தவர் என்றும்நற்குடிப்பிறப்பினர் என்றும்பாராட்டுக்கு ஆசைப்படினும் அதனைப்பெறும் பொழுது  நாணுபவர் என்றும்பகைவர் நண்பர் இருவர் திறத்தும் பொது நிலையினான் என்றும்வெகுளிபயனில் சொல்சிறு தேவைகள்சிற்றாசைகள் முதலியவற்றிலும் முற்றும் நீங்கியவர் என்றும்மென்மையான நடையும் ஆற்றல்மிக்க குறலும்தெளிவான பேச்சும் இவருக்கே உரியன என்று அரிஸ்டாட்டிலை வரையறை செய்தனர்சான்றாண்மைநட்புடைமைவாய்மைஅணி நலன் மிக்க கூரிய அறிவு முதலியனவும் பெருமைக்குரியாரின் குணங்கள் என்பார் அரிஸ்டாட்டில்.
முடிவுரை
            ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் மண்ணில் திருவள்ளுவரும், கிரேக்க மண்ணில் சாக்ரட்டீஸ்பிளேட்டோஅரிஸ்டாட்டில் ஆகிய அறிஞர்களும் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழிக்கும்கிரேக்க மொழிக்கும் நெருக்கமான உறவு நிலை என்பது கிடையாதுஆனால் உணர்வு அடிப்படையில் இவ்விருவேறு இடங்களில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பல்வேறு இடங்களிலும் பொதுநலச் சிந்தனையாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதனை இவ்வறிஞர்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்உலக மக்கள் அனைவரும் நல்வழிப்பாதையில் செல்லவும்வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் வள்ளுவர் எவ்விதக் கருத்துக்களை முன் வைத்தாரோ அதே பொதுநலச் சிந்தனைக் கருத்தியல்களை முன்வைத்து சாக்ரட்டீஸ்அரிஸ்டாட்டில்பிளேட்டோ ஆகிய மூவரும் வெளிப்படுத்தியமையை உணரமுடிகிறது.
உதவிய நூல்கள்
  1. திருக்குறள் பரிமேழலகர் உரை
  2. நா. வானமாமலை, திருக்குறள் உணர்த்தும் உறுதிப்பொருள்
முனைவர் சொ.சுரேஷ்
             உதவிப் பேராசிரியர்
             தமிழ்த்துறை
             அழகப்பா பல்கலைக்கழகம்
             காரைக்குடி - 3



குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள்
                                                                                                    - த. சத்தியராஜ்
பரத்தை எனும் சொல்லும்காமக்கிழத்தி எனும் சொல்லும் தொல் வழக்கில் இருந்துள்ளதென்பது தொல்காப்பியம் காட்டும் உண்மைஇச்சொற்கள் தற்பொழுது மருவி விலைமகளிர் , விபச்சாரி (Prostitute) என வழங்கப்படுகின்றனஇம்மகளிர்களின் வாழ்க்கைநெறி காம நுகர்ச்சியினால் தம்மை நாடி வருவோருக்குஅத்தாகத்தைத் தீர்த்து மகிழ்ச்சி அளிப்பதேயாம் என்பது உலகளாவிய பொதுச்சிந்தனைஇதனை ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் பதிவு செய்துள்ளனபதிவு செய்தும் வருகின்றனஅச்சிந்தனையைத் தமிழில் குறுந்தொகையும்பிராகிருதத்தில் காதா சப்த சதியும்  பதிவு செய்துள்ளனஅதனை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மேலும் வாசிக்க: http://www.muthukamalam.com/essay/literature/p60.html


வள்ளுவரும் சர்வக்ஞரும்: நட்புச் சிந்தனைகள்

சே.முனியசாமி
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்.
மனித உறவில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு கடப்பாடு உண்டு. தாய்க்குப் பிள்ளையைப் பெற்றெடுப்பது; தந்தைக்குப் பொருளீட்டச் செல்வதும், பிள்ளைகளைச் சான்றோர்களாக்குவதும் ஆகும். இவை சமுதாயத்தில் நடக்கும் என்றும் மாறாத இயல்புகள். அதனைப் போல் நட்புக்கும் சில கடப்பாடு உண்டு . அது நட்பு உடையவர்களை நன்னெறிப்படுத்துவதும், உயர்வடையச் செய்வதும் ஆகும். ஞாயிறு எவ்வாறு இயல்பாக தோன்றுகின்றதோ அதுபோல நட்பினைப் பெறுவதற்கு யாரும் அடையாளம் காட்டத் தேவையில்லை. இயல்பாக மனத்தால் அறியக்கூடிய ஓர் உன்னத உறவே நட்பு. நட்பிற்கு இணையாக நட்பே கருதப்படுகிறது. அந்நட்புக் குறித்துத் தமிழில் வள்ளுவரும், கன்னடத்தில் சர்வக்ஞரும் எடுத்தியம்பியுள்ளனர். திருக்குறளிலும் சர்வக்ஞர் உரைப்பாவிலும் (மொழிபெயர்ப்பு) அமைந்த நட்புச் சிந்தனைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கட்டுரையை முழுமையாக வாசிக்க http://www.geotamil.com/pathivukalnew/muniyasamy9.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன