ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஏழைகளின் நாயகன் = இளைஞர்களின் நாயகன்

இவர்களுக்கு லைக்கும் வராது, கமெண்ட் வராது,,,,,,,, ஏன்னா!!!இவங்க நடிகர் இல்ல............... தமிழா,தமிழனின் திறமையை தரணியில் பரப்ப ஓர்_புதிய_முயற்சி
நடிகர்கள் எனில் லைக் சேர் வரும்,மக்களால் நேசிக்கப்பட்டு,மக்களால் மறக்க முடியாத நல்ல தலைவர்களுக்கு Like-Share வருமா என எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)

ஏழைகளின் நாயகன்--------------இளைஞர்களின் நாயகன்
கையில் ரொக்கம்-100ரூ----------புத்தகங்கள் -2500
வங்கியில் ரொக்கம்-125ரூ-------கை கடிகாரம் -1 
கதர் வேட்டி,துண்டு,சட்டை-4---முழுகை சட்டை -6
பேனா---1------------------------------கால் சட்டை -4
கண்கண்ணாடி---1------------------சூட் - 3
காலணி---2ஜோடி------------------ஷூ - 1 ஜோடி 
இவர்கள் போல் மக்கள் தலைவர்கள் இனி இருக்கவும் போவதில்லை,பிறக்கவும் போவதில்லை
கோடி கோடியாய் ஊழல்செய்யும் தலைவருக்கு மத்தியில் இப்படியும் வாழ்ந்தனர் இந்தியனாய்/தமிழனாய்.நல்ல தலைவனாய்
நன்றி - முகநூல்

ஞாயிறு, 22 நவம்பர், 2015

தமிழினியின் வரைகலைகள்

ச.தமிழினி
LKG B
சாவரா வித்யா பவன் மேல்நிலைப் பள்ளி
கோவை.

கணினித்தமிழ் ஆய்வாளர் செல்வமுரளி

திரு. செல்வமுரளி (1985) ... கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு இளம் கணினிப்பொறியாளர் ... எப்போதும் (இளமைத்) துடிப்புடன் புதிய புதிய சாதனைகளைக் கணினித்தமிழில் அளிக்கவேண்டுமென்று செயல்பட்டுக்கொண்டிருப்பவர். கணினி வன்பொருள், மென்பொருள் இரண்டிலுமே சாதனைகள் படைத்துக்கொண்டிருப்பவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தினகரன், தினமலர் பத்திரிகைகளிலும் சன் நெட்வொர்க்க்கிலும் வடிவமைப்பு, இணையதளம் உருவாக்கம், கணினிப்பராமரிப்பு ஆகிய பணிகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் சொந்தமாகவே விஷுவல் மீடியா, விஷுவல் மீடியா டெக்னாலஜி என்ற நிறுவனங்களை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறார். பஸ்லைன்ஸ் என்ற இணையதளத்தின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். 'தமிழ் வணிகம்', 'உலகத்தமிழ் ஒலி', 'விவசாயம்'. 'தேனிக்கூட்டம்' என்று பல இணையதளங்களை நடத்திவருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யும் பணியிலும் சில காலம் ஈடுபட்டிருந்தார்.

கணினித்தமிழ் ஆய்வாளர்

திருமதி ம. பார்கவி (1984) ... போடிநாயக்கனூரில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிப்படிப்பிற்குப் பின்னர், திண்டுக்கல் ஆர். வி. எஸ். பொறியியல் கல்லூரியில் பி.இ. (மின்னணுவியல் , தகவல்தொழில்நுட்பம்) படிப்பில் இணைந்து 2006-இல் பட்டம் பெற்றார். அதன்பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (தமிழ்மொழித்துறையின்) மொழியியல் ஆய்வுப்பிரிவில் நிறுவப்பட்டிருந்த கணினிமொழியியல் ஆய்வுக்கூடத்தில் (Computer assisted Language Technology Lab - CALT) 2007-08 ஆண்டுகளில் கணினிநிரலாக்கராகப் பணிபுரிந்தார். அங்கே முதுகலை, எம்ஃபில் கணினிமொழியியல் படித்த மாணவர்களுக்குக் கணினியின் அடிப்படைகள், நிரலாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு உதவினார். மொழியியல் துறையோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட இவர், பின்னர் அத்துறையில் செயற்பாட்டுமொழியியல் மாணவராகவே இணைந்து (2008-10) , அதில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தமிழறிஞர் முனைவர் சிதம்பரம்

முனைவர் (சிங்காரம்). சிதம்பரம் (1976) ... காரைக்குடி நகரைச் சேர்ந்த ஒரு இளம் ஆய்வாளர். அங்கேயுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் உருவாக்கம்... அங்ககேயே தமிழில் முதுகலை, எம்ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். 'சோழநாட்டுப் புலவர்களின் இலக்கியக்கொள்கை (சங்ககாலம்)' என்ற தலைப்பில் இவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. கோயில்கலையில் முதுகலைப் பட்டயச் சான்றிதழும் காந்தியச் சிந்தனையில் பட்டயச் சான்றிதழும் பெற்றுள்ளார்.

திங்கள், 9 நவம்பர், 2015

பொருந்தல் அகழ்வாய்வு

அசோகன் காலத்துக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில், தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் இருந்தது பற்றிய சான்று கிடைத்த இடம், "பொருந்தல்".
பழனிக்கு அருகில் தென்மேற்கில் இருக்கும் பொருந்தல் என்ற கிராமத்தில் 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெல்லும், தமிழ் பிராமி பொறிப்பு கொண்ட புரிமனையும், சவஅடக்கம் செய்யும் தாழிகள் போன்றவை கண்டுடெடுக்கப் பட்டுள்ளன. இவை கி.மு 490 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்ற அறிவியல் ஆய்வின் முடிவால் தெரியவந்திருக்கிறது.
கண் டெடுக்கப்பட்டுள்ள இந்த சவஅடக்கம் செய்யப்பட்ட தாழிகள் பல அரிய பொருள்களைத் தந்துள்ளன. இரண்டு கிலோ நெல் உள்ளே வைக்கப்பட்டிருந்த நான்கு கால் கொண்ட ஜாடி ஒன்றும், வா-அய்-ரா என்ற தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு மோதிர தாங்கிகள் ஆகியவை இதில் அடக்கம். அமெரிக்காவின் பிடா பகுத் தாய்வு நிறுவனத்தால் இந்த நெல் கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என அக்சலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி முறையில் கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வு தரும் முடிவுகள், அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.

உழைப்புக்குப் பார்வை அவசியமில்லை

அருகே உள்ள கடலோர கிராமமான வெள்ளரி ஓடையில் தனி குடிசையில் மனைவி கலாவதி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார் முருகாண்டி.
முருகாண்டி கூறுகையில், எனக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. அப்பாவும், சிறுவயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இலங்கையில் போய் நிரந்தரமாக தங்கிவிட்டார்.
அம்மாதான் பாய், கூடை முடைந்து கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார். ஊரைச் சுத்தி பனங்காடுகளா இருந்தால் எனக்கு பனை மரம் ஏற, பாய் முடைய, நுங்கு சீவ, வேலி அடைக்க, ஓலை கிழிக்க அம்மா பழக்கினார்.
எனவே 10 வயதில் இருந்து அம்மாவுடன் வேலைக்கும் போக ஆரம்பித்தேன்.
பின்னர் அம்மாவுக்கு வயசாகியதால், என்னை கவனிக்க முடியாமல், கல்யாணம் பண்ணி வைத்தனர்.
எனது மூத்த மகள் சிம்புரா சாலினி 12-ம் வகுப்பும், இளைய மகள் லாவண்யா 10-வதும் படிக்கின்றனர்.
என் மனைவியால சரியா நடக்க முடியாததால், மருத்துவச் செலவு, குடும்பச் செலவு இருப்பதால் எதுக்கு இரண்டு பிள்ளைகளையும் வேலைக்கு அனுப்பி விடு என்று ஊர்க்காரர்கள் சொல்கின்றனர்.
ஆனால், என் பிள்ளைகளை படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்கவேண்டுமென்று வைராக்கியமாக இருக்கிறேன்.

தமிழறிஞர் முனைவர் துரை. மணிகண்டன்

தெய்வ சுந்தரம் நயினார்'s photo.
முனைவர் துரை. மணிகண்டன் (1973) ... தமிழ் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிற ஒரு துடிப்புள்ள தமிழ் ஆய்வாளர். கணினித்தமிழ் உலகில் வலைப்பூக்கள் மலர்ந்து மணம் தரவேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கில் இடைவிடாது தனது பயிலரங்கப் பயணத்தை மேற்கொண்டுவருபவர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழில் இளங்கலை, முதுகலை , ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தேசியக் கல்லூரியில் ( பாரதிதாசன் பல்கலைக்கழகம்) 'இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் ' என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். கணினிப்பிரிவிலும் சான்றிதழ் பெற்றவர். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பேராசியராகத் திருவரங்கத்தில் ( ஸ்ரீரங்கம்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். தமிழகத்தில் தமிழ் இணையம், வலைப்பூக்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உடைய எவருக்கும் இவரைத் தெரியாமல் இருக்கமுடியாது.

சனி, 7 நவம்பர், 2015

தமிழ் மொழியில் ஒரு கணினி நிரலாக்க மொழி (புரோகிராமிங் லாங்வேஜ்)

கணினி தமிழர்களுக்கு அறிமுகமான காலத்திலிருந்தே, தமிழிலும் ஒரு கணினி நிரலாக்க மொழி உருவாக்கிட முயற்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்று தான். பற்பல காரணங்களுகாகவும் இது முழுவதுமாக நிறைவேராத ஒன்றாகவே இருக்கிறது. "முழுவதுமாக நிறைவேராத ஒன்று" என நான் குறிப்பிட்டுள்ளதற்கு காரணம், பலரும் இதை செயற்படுத்த முனைந்துள்ளனர். கணினிசார் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களாலும் சில தொழிற்நுட்ப கல்விக்கூடங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களிலும் இது முயற்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் பலநேரம் ஒரு ஆய்வறிக்கையோடே நின்றுவிட்டது அல்லது இவ்வாய்வாளர்கள் எதிர்கொள்ளும் எதிர்வினையான அறிவுரைகளாலும் சரியான உக்குவிப்பு கிடைக்காததாலும் ஒரு சலிப்பு ஏற்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

தமிழறிஞர் முனைவர் ந. அரணமுறுவல்

தெய்வ சுந்தரம் நயினார்'s photo.முனைவர் ந. அரணமுறுவல் (20-10-1949) ... தனித்தமிழ் உணர்வாளர் ... தமிழியக்கத் தொண்டர் ... ஈழ விடுதலைப்போராட்டத் தீவிர ஆதரவாளர் ... பொதுவுடமைச் சிந்தனையாளர் ... தமிழ்த்தேசியப் போராளி... இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனக்கு 40 ஆண்டுகால நண்பர் ... தோழர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஓஎல்., பட்டம், சென்னைப் பச்சையப்பா கல்லூரியில் தமிழில்முதுகலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில்தமிழ்மொழித்துறையில் எனது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி இதழுக்கு ஆணிவேராகச் செயல்பட்டவர். தென்மொழி இதழுக்காகவே கடலூரிலிருந்து சென்னையைநோக்கித் தனது வாழ்க்கையைத் திருப்பினார். சூளைமேட்டில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.

நாடக நிலத்திலிருந்து

'மணல்மகுடிக் கலைஞர்களுடன் முருகபூபதி அண்ணன்'
நாடக நிலத்திலிருந்து நண்பர்களுக்கு வணங்களுடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாய் நம் நிலத்தின் கோமாளி தேடிய மணல்மகுடியின் பயணம் மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும்  பாறைவெளியில் நவீன ஓவியர்களின் தூரிகையில் கோமாளி முகம் தேடிய கலைமுகாமில் துவங்கி தமிழ் நிலமெங்கும் அலைந்து சூரங்குடி சாமியாட்டம்,தொன் கோயில் சிற்பங்கள் என மணல்மகுடி கலைஞர்கள் திரட்டிய பதிவுகளுடன் சமவெளி கடந்து ஜவ்வாது மலைக்குன்று கூத்துக் கலைஞர்கள், நீலகிரி மலைவாழ் படுகர்கள்,தோடர்கள், இருளர்கள் என ஆதிப் பழங்குடிகளின் மொழி அலையுறும் மலைக்காட்டுக் கருவிகளின் இசை இழுத்து மூச்சாக்கி,கரிசல் நிலத்தின் ஜிம்ளா முயங்களில் நம் நாடக தாத்த சங்கரதாசு சாமிகளின் ஆசி வழி பிரதியாகி ஒத்திகையில் ஆற்றுகை வடிவமாகிக்கொண்டிருக்கிறது.

பண்டைய தமிழரின் நெல் நாகரீகம்

பண்டைய தமிழரின் நெல் நாகரீகம் - கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு.
________________________________________________
nel 2
பழனி அருகே உள்ள பொருந்தல் பகுதியில் வாழ்விடத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கண்ணாடி மணிகள் மெருக்கேற்றப்பட்ட அழகிய கண்ணாடி மணிகளாக இருக்கின்றன. இந்த மணிகள் பல்வேறு நிறத்தில் காணப்படுகின்றன.

வெள்ளி, 6 நவம்பர், 2015

விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்

விகிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு அழகிய அஞ்சல் அட்டைகளை வெல்லுங்கள்! கூடுதல் கட்டுரைகளை உருவாக்கி “விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்” என்ற சிறப்பினைப் பெறுங்கள்!
க்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
WikipediaAsianMonth-ta.svg
ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம்(Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2015 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது ஐந்து புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.
ஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் “விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்” என சிறப்பிக்கப்படுவார்கள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

உறவு


வண்டுகள் ரீங்கார மிட்டனர்
வளர் பூக்களைக் கண்டு!

ஆடுகள் மெய் சிலிர்த்தனர்
ஆசைதரும் புட்களை உண்டு!

மாடுகள் மகிழ்வு எய்தினர்
மயக்கும் பசுந்தளிர் தின்று!

கிளிகள் கிள்ளைப் பேசினர்
கிணற்றுக் கண்ணாம் பொந்து கண்டு!

மைனாக்கள் மயக்கம் தெளிந்தனர்
மையலார் நட்ட பனை கண்டு!

கோழிகள் குதூகளித்தனர்
காலை வரவைக் கண்டு!

காக்கைகள் கூச்சலிட்டனர்
கருத்து உணவு கண்டு!

மனித சந்துகள் புலம்பின
மயக்கும் மது உண்டு!

மாலையும் மயங்கினர்
மையல்கள் குழுமிடக் கண்டு!

கொண்டவனும் கொக்கரிக்கும்
கொளுந்து உசுப்பிவிடக் கண்டு!

குருதி உறவும்
குதறிப் போகுதே இன்று
அண்ணன் தம்பி
அக்காள் தங்கை
மச்சான் மச்சினி
உறவுகளே ஆக்கும் நின்று
இதை அறியடா மண்டு! மண்டு!!

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடுஇந்தியா,
                                                                    9600370671

   உறவு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன்இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும்போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

கூடுங்கள் பதிவர்களே




நண்பர்களே,
தமிழ் வழி இணைவோமா
புதுகையில் சங்கமிப்போமா
சங்கமித்துத்தான் பார்ப்போமா
புதுகையை புரட்டிப் போட்டுத்தான் காட்டுவோமா
தமிழுலகையே திரும்பிப் பார்க்கத்தான் வைப்போமா


நன்றி

http://karanthaijayakumar.blogspot.com/2015/10/blog-post.html

வியாழன், 1 அக்டோபர், 2015

முற்றம்


மாலை மயங்கி
மலரும் வாடி
மழலைகள் ஆட
மயங்கும் வானம்!

ஊரார் உறங்க
ஊர்ப்பெண் சங்கதி
மறைவாய் அம்பல்!

அம்பல் அடங்குமுன்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததே!
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததே!
அழகு ஆடல்
மலையைத் தழுவும் 
மேகங்கள் முழங்க...

வானத்திரி வருது! மயிலாட வருது!
ஏந்திரி வருது! எதுக்க நின்னு
கதக்க வாய பொள...

கலைகள் ஆயிரம்
மனதை மயக்க
குழுப்பண்பும் குதிராய்!

முற்றம்
முள்வேலியாக
சுவராக

சூரிய கிரகணம் ஆனதே! 

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671
      முற்றம்  எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

புதன், 30 செப்டம்பர், 2015

மரபுக் காதலும்! நவீனக் காதலும்!



அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவர்களைத்தான்
தோழியும் நோக்கினாள்
களவு கனிந்தது
கற்பாய் மலர்ந்தது
நனியுறும் சங்கக் காதல்!

சீதையும்  இராமனும்
சிலிர்த்து நோக்க
சிறப்பாய்த் திருமணம் நடத்தி
சீர்பெறச் சிறப்பித்தார்

காதல் நெஞ்சங்களை
அப்பனும் நோக்க
அடுத்தவனும் நோக்க
அலறுமே! நெஞ்சங்கள்
கல்வி யுகத்திலே
கணினி யுகத்திலே
கல்லறைகளில்……

வீடும் சமூகமும்
சாதிசமயப் பண்பாடுகளைச் 
சாட்டைகளாய் அணிந்து கொள்ள
பகுத்தறிவு கொண்டு விரட்டு!
மலரட்டும் காதல் மனிதம்
வாழ்த்தும் மலர்த்தூவி
மேகங்கள் மழைத்துளிகளாய்!
முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


மரபுக் காதலும்! நவீனக் காதலும்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.