வியாழன், 13 நவம்பர், 2014

Gnana Sambandha Upaathiyaayar (20th Cent.)


Birth Place  : SuLipuram in ILa Naadu; was lived in Thirunelveli.

Father   :   Selvanaayaka Chettiyaar; Saivar

      He was a scholar of Arumuganaavalar; good at learning the works of Kanthapuranam; Periyapuranam and instructed it to others. Moreover, he was a great orator and poet.

Works  : Maa Nikka piLLaiyaar Thiruvarutpaa, Kathirkaamavelar Thiruvarutpaa, Unique songs (Thanip paadal).

Translated by :    R. Nithya Sathiyaraj
                
Source: Biographical Dictionary of Tamil Men of  Letters (Tamil)

சனி, 8 நவம்பர், 2014

ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை

                                                - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)

அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.