திங்கள், 19 ஆகஸ்ட், 2013

சமையலறைப் பக்கம்

                                    32ஆம் பாடம்
கலசத்திலே பால் கறந்து கொண்டுவா.
பாலை வடித்துக் காய்ச்சிப், பிரை இட்டு, மூடி, உறியிலே வை.
தயிரை மத்தினாலே கடைந்து, வெண்ணெய் எடுத்து வை.
மோரை, நீர் விட்டுப் பெருக்கு.
சலம் வர்த்து, அரிசி களைந்து, சோறு சமை.
அம்மி, குழவிகளை நன்றாகத் தேய்த்துக் கழுவிக் கொண்டு, கூட்டு அரை.
பனையின் பதநீரைக் காய்ச்சினால், பனைவெல்லம் உண்டாகும்.
கருப்பஞ் சாற்றைக் காய்ச்சினால், சர்க்கரை உண்டாகும்.
கல், உமி, தவிடு, மயிர் இல்லாமல் அரிசியை நன்றாக ஆராய்ந்து கொள்ளல் வேண்டும்.
அடுக்களையானது, உள்ளே வெளிச்சம் வரத் தக்கதாக இருக்க வேண்டும்.
                                    (ஆறுமுகநாவலர், 1950, 1959:21, 2003:31)
சலம் - நீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன